2026 மே 05, செவ்வாய்க்கிழமை

பிரதமர் தலைமையில் கூட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடந்து வருகின்றது. 

எதிர்வரும் காலத்தில் செய்யப்பட்டவுள்ள அபிவிருத்தி தொடர்பில் இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. 

இக் கூட்டத்தில், வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .