2025 ஜூலை 12, சனிக்கிழமை

’பிரதமர் பதவி தொடர்பில் நிலைப்பாட்டை அறிவிப்பது பொருத்தமற்றது’

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தை மாற்றியமைத் தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் மூலம் சட்டமா அதிபர் இன்று அறிவித்துள்ளார்.

குறித்த சிக்கல் நிலைத் தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, கடந்த 27ஆம் திகதி சபாநாயகரால் சட்டமா அதிபருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள சட்டமா அதிபர் அரசமைப்பின் கீழ் சட்டமா அதிபர் என்ற ரீதியில்  அதுத் தொடர்பில், அறிவிப்பை விடுப்பது பொருத்தமற்றதென தனது அபிப்ராயத்தை சட்டமா அதிபர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .