Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அடுத்த கம்பிபாடு கடற்கரையில் கடந்த 5ஆம் திகதி மெரைன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொனராகலை பகுதியைச் சேர்ந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய பிரதீப் குமார பண்டார என்பவரை எதிர்வரும் 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் வைத்து எடுத்து விசாரிக்க இராமநாதபுரம் நீதிமன்றம், இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது.
போதை பொருள் விற்பனை செய்வதில் இவருக்கும் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை அங்கொட லொக்காவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே, அவரை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்ததும், அவரை எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago