Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவரது சகோதரி பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துலக்க்ஷி சமோதரி மற்றும் சகோதரி ஆகியோர் கடந்த மாதம் 20ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாரவில நீதவான் நீதிமன்றில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் துலக்க்ஷி சமோதரியை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அவரது சகோதரியை பிணையில் விடுவித்துள்ளது.
6 minute ago
10 minute ago
19 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
19 minute ago
13 Mar 2026