2025 ஜூன் 16, திங்கட்கிழமை

பிரத்தியேக வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க யோசனை

ஆர்.மகேஸ்வரி   / 2020 ஜூன் 25 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரத்தியேக வகுப்புகளில்100 மாணவர்கள் என  மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை விட அதிகமான மாணவர்களை இணைத்துக்கொள்வது குறித்து, அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்ட அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (25) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ந​டைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இடப் பிரச்சினைகள் காணப்படும் பிரத்தியேக வகுப்புகளுக்களில் 100 மாணவர்களுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X