2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிறக்கும் சிசுக்களுக்கும் அடையாள அட்டை

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களுக்கான அடையாள அட்டை இலக்கத்தை விநியோகிப்பது அவசியம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த யோசனையை முன்வைப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப குழு கூட்டத்திலேயே இந்த  விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தை செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .