2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

’புதிய அரசமைப்புக்கான பணிகள் ஏன் நிறுத்தப்பட்டன?’

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், தற்போது அந்தப் பணிகள் கைவிடப்பட்டு உள்ளதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எதற்காக அந்தப் பணிகள் கைவிடப்பட்டன என்று தெரியவில்லை என்றார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு, இன்று (05) இடம்பெறவுள்ளது. இதற்கான இறுதி விவாதத்தில் கலந்​துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய சம்பந்தன் எம்.பி, தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு என்றும் எங்கள் அதிகாரம், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .