2025 ஜூன் 25, புதன்கிழமை

’புதிய இராணுவ உடன்படிக்கை இல்லை’

Editorial   / 2019 மே 25 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், புதிய இராணுவ உடன்படிக்கை எதுவும் முன்மொழியப்படவில்லை என்றும் ஆனால், இலங்கையுடன் 1995ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இராணுவ உடன்படிக்கையில், சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களில், அமெரிக்க இராணுவத்தினரும் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த சிவிலியர்ககளும், இலங்கைக்கு எவ்வாறு பயணம் செய்ய முடியும் என்பதை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

அமெரிக்காவும் இலங்கையும், இரண்டு நாடுகளினதும் மக்கள் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்பியுள்ளன என்றும் இந்த புதுப்பிப்புகள், ஏற்கெனவே இடம்பெறும் செயன்முறைகளைச் சீர்செய்து, பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறைகள், கடல் பாதுகாப்பு, ஏனைய பொதுவான கரிசனைக்குரிய விவகாரங்களின் மீது இலங்கை இராணுவத்துடன் ஒத்துழைக்க உதவுகின்றன என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க படைகள் தளம் அமைப்பதற்கோ அல்லது இங்கு கருவிகளை வைத்திருக்கவோ எந்த வகையிலும் இந்த உடன்பாடு அனுமதிக்காது என்று கூறியுள்ள அவர், அமெரிக்க படையினர், கப்பல்கள், விமானங்கள், இலங்கையின் பிராந்தியத்துக்குள்ளேயோ அதன் நீர்ப்பரப்புக்குள்ளேயோ வான்பரப்பிலோ நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு  அனுமதிக்கும் அல்லது மறுக்கின்ற எல்லா உரிமைகளையும் இலங்கை கொண்டிருக்கும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .