Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு பங்களிப்பது மகாசங்கத்தினரின் தேசிய பொறுப்பாகும்.... - அமரபுர, ராமண்ய மகா நிகாயக்களின் தேரர்கள் பிரதமரிடம் தெரிவிப்பு
"விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது செயலாளர் இவ்வளவு சிறந்த விளக்கத்துடன் விடயங்களை முன்வைத்ததை நாம் இதற்கு முன்னர் பார்த்ததில்லை..."
"மகா சங்கத்தினராக அந்த அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்..."
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விளக்கமளிக்கும் விசேட கூட்டம் திங்கட்கிழமை (4) திகதி இலங்கை ராமண்ய மகா நிகாயவின் தலைமைச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ, புதிய சீர்திருத்தங்களின் தேசிய முக்கியத்துவம், பாடத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது தேரர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள் வழங்கப்பட்டன.
சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்புகள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.
மேலும், பிரிவெனா கல்வி, அறநெறிப் பாடசாலைக் கல்வி, மற்றும் முன்பள்ளிக் கல்வி ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து தேரர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்துடன், புதிய சீர்திருத்தங்கள் மூலம் பாடசாலைகளில் இரண்டாம் மொழியைக் கற்பிப்பதற்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் அளித்த தெளிவான விளக்கங்கள் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய மகா நிகாயக்களின் தேரர்கள், அவர்களுக்கு நல்லாசிகளையும் வழங்கினர்.
"நாடு முழுவதும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குப் பங்களிப்பது மகாசங்கத்தினரின் தேசிய பொறுப்பாகும்" என்றும், "ஒரு அமைச்சராகவும், செயலாளராகவும் இவ்வளவு சிறந்த விளக்கத்துடன் விடயங்களை முன்வைத்ததை நாம் இதற்கு முன்னர் கண்டதில்லை" என்றும் தேரர்கள் குறிப்பிட்டனர்.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயவைப் பிரதிநிதித்துவப்படுத்தி மகா விகாரையின் அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய சாஹித்யசூரி கன்துனே அஸ்ஸஜி மகா நாயக்க தேரர், அமரபுர தர்மரக்ஷித பிரிவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய திருகுனாமலயே ஆனந்த மகா நாயக்க தேரர், இலங்கை ராமண்ய மகா நிகாயவின் அதிகரண சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய அக்கமகா பண்டி பேராசிரியர் அத்தங்கனே ரத்னபால தேரர், இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர் சங்கைக்குரிய தர்சனபதி பலப்பிட்டியே சிறிசீவலி தேரர், இராமண்ய மகா நிகாயாவின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வலேபொட குணசிறி நாயக்க தேரர், ராமண்ய மகா நிகாயவின் அனுநாயக்க தேரர், ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் சங்கைக்குரிய தீவெல மஹிந்த தேரர், ராமண்ய மகா நிகாயவின் பொதுப் பதிவாளர் சங்கைக்குரிய சாஸ்த்ரபதி அத்தங்கனே சாசனரத்தின மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர்கள், இரண்டு நிகாயக்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் கல்விச் சேவைகள் மேலதிக செயலாளர் கமல் ஆரியசேன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
24 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago