2025 ஜூன் 23, திங்கட்கிழமை

புத்தகயாவுக்கு வீரர்கள்களின் விசேட விஜயம்

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆயுதப் படையின் 160 வீரர்கள், அவர்களது குடும்பங்களின் புத்தகாயாவுக்கான விசேட யாத்திரைக்கான பயணம், இன்று (15) முதல் 18ஆம் திகதி வரையில், நடைபெறவுள்ளது.

இரண்டாவது தடவையாக இடம்பெறும் இந்த யாத்திரையை, இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது. இரு நாடுகளினதும் ஆயுதப் படை வீரர்களுக்கிடையில் இடைத்தொடர்பு,  நட்பு என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடலின் அடிப்படையில், இந்த விசேட யாத்திரை ஏற்பாடு கடந்த வருடம் ஆரம்பமாகியது.

இந்த வருட யாத்திரை, கடந்த ஆண்டை விட, இரண்டிலிருந்து நான்கு என அதிகரித்த நாள்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவிலிருந்து 160 ஆயுதப் படையினர், அவர்களது குடும்பங்கள், இலங்கைக்கு பரஸ்பரம் விஜயம் செய்தல் என்பதையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

யாத்திரையின் போது, இலங்கை ஆயுதப் படை வீரர்கள், அவர்களது குடும்பங்கள்,  புனித மாகாபோதி ஆலயம், 80 அடி உயர புத்தர் சிலை, ராஜ்கிர், நாலந்த அருங்காட்சியகம் என்பவற்றுக்கு விஜயம் செய்வார்கள். இலங்கை இராணுவத் தளபதியின் ஒரு விசேட வேண்டுகோளின்பேரில் இந்தியக் குழுவினர், இலங்கையிலுள்ள முக்கியமான இடங்களுக்கு விஜயம் செய்வார்கள்.

இந்திய ஆயுதப் படையினர், அவர்களது குடும்பங்களின் ஒரு பெரும் குழு ஒரு விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .