2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் ஆர்ப்பாட்டம்: இளைஞனுக்கு மறியல்

Editorial   / 2019 ஏப்ரல் 06 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளத்தில் குப்பைத் திட்டத்துக்கு எதிராக  மாணவர்கள் நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி, மாணவர்களை வழிநடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞரை, எதிர்வரும் திங்கட்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் லகிரு என்  சில்வா, இன்று (06)  உத்தரவிட்டார்.

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மீதான இரண்டாம் வாக்கெடுப்புக்கு எதிராக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும், புத்தளத்தில் நேற்று (05) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஒன்றினைந்த மாணவர் பேரவை ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில், புத்தளம் நகர பாடசாலை மாணவர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

புத்தளம் தபால் நிலையத்துக்கு முன்னால் இருந்து பேரணியாகச் சென்ற மாணவர்கள் புத்தளம் - கொழும்பு முகத்திடல் வரை குப்பைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர்.

இதையடுத்து, குறித்த மாணவர்கள் புத்தளம் - கொழும்பு முகத்திடலில் பாதையை, மறைத்து போராட்டம் நடத்தியமையால் சில மணி நேரம் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியூடனான போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்தன.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு புத்தளம் பொலிஸார் வருகை தந்தமையால் அங்கு அமைதியின்மை நிலவியது.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைதியான முறையில் அவ்விடத்தை விட்டு களைந்துச் சென்றனர்.
இதன்போது, பாடசாலை மாணவர்களை சட்டவிரோதமாக ஒன்று௯ட்டி, வீதியை மறைத்து பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 20 வயதுடைய  இளைஞர், புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .