2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் குப்பை திட்டத்தை எதிர்த்த இளைஞன் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களை ஈடுபடுத்தி இன்று (05) ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய இளைஞனை, புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஒன்றுதிரட்டி, போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு  இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்,  20 வயதுடைய குறித்த இளைஞனை, கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் தபால் நிலையத்துக்கு முன்னாள் இருந்து பேரணியாக சென்று, புத்தளம் கொழும்பு முகத்திடல் வரை கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் வீதியை மறித்து போராட்டம் நடத்தியதால், சில மணி நேரம் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியூடனான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .