2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டுச் சலுகை

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு  சதொச நிறுவனம் அத்தியாவசியப் பொருள்கள் சிலவற்றின் விலைகளைக் குறைத்துள்ளது.  

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கும் அமைய, நடைமுறைக்கு வரும் இந்த விலைக்குறைப்பானது நேற்று (04) முதல் அமுலுக்கு வந்துள்ளது என நிறுவனத்தின் தலைவர் தாரிக் தெரிவித்தார்.

இதேவேளை, மேலும் 15 சதொச கிளைகளை, புத்தாண்டுக்கு முன்னர் நிறுவுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, தனமல்விலயில் இரண்டு கிளைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், நாடளாவிய ரீதியில் தற்போது, 411 சதொச கிளைகள் உள்ளன. அவற்றை, இவ்வருட முடிவுக்குள் 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .