Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 06 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, திறைசேறிகளின் முன்னாள் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகிய இருவரையும் இந்த மாதம் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மூவரடங்கிய நிலையான மேல் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக கடமையாற்றிய காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு தேவையன சாட்சிகளை வழங்குவதற்காகவே பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, திறைசேறிகளின் முன்னாள் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இவ்வழக்கின் பிரதவாதிகளின் சாட்சி விசாரணைகளை 13ஆம் திகதி நடத்த சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதேவேளை முறைபாட்டு தரப்பினரின் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
லிட்ரோ லங்கா சமையல் எரிவாயு நிறுவனமானது தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கிய 500 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மற்றுமொரு தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக முதலீடு செய்யும் போது, நிதி மோசடி இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு விசாரளைணகள் இடம்பெற்று வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago