2025 ஜூன் 12, வியாழக்கிழமை

பெசிலுக்கு ஆப்பு?

Nirosh   / 2022 மே 22 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாளை (23) அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், உடனடியாக அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

21ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லாதொழிக்கப்படும் எனவும், தற்போது பாராளுமன்றத்தில் உள்ள இரட்டைக் குடியுரிமைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பறிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமைக் கொண்ட இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர். 21ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் பெசிலின் எம்.பிப் பதவி பறிப்போகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13