Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Janu / 2025 ஜூன் 30 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடொன்றில் தீடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெட்ரோலை பயன்படுத்தியமையால் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீட்டார் இது தொடர்பாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
க. அகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago