2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோலிய வள பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யக்கோரி, நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்த, பெற்றொலிய வள பணியாளர்கள் தமது பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளனர்.

நேற்றைய தினம் பெற்றோலியக் கூட்டுதாபன வளாகத்தில் இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்து, ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, முன்னாள் அமைச்சரைக் கைதுசெய்யக் கோரி, பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள்  பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்த நிலையில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன குற்றப்புலனாய்வு பிரிவினரால்  இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .