Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 19 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
எதிர்வரும் இரு நாட்களுக்கு பெற்றோலுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம். வரிசைகளில் நின்றாலும், பெற்றோலை வழங்க முடியாத நிலையே காணப்படுவதாக தெரிவித்த வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பெற்றோல், டீசல் விநியோகச் செயற்பாடுகள் இவ்வார இறுதியிலேயே வழமைக்கு திரும்பும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடுமுழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயற்பாடுகள் எதிர்வரும் வாரங்களுக்கும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். நாட்டுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளபோதிலும், பெற்றோல் கையிருப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
குறிப்பாக கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் நாட்டுக்கு பெற்றோலை ஏற்றிவந்த கப்பல்கள் இலங்கைக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பலுக்கு செலுத்தப்பட வேண்டிய டொலரை நாம் இன்னும் தேடவில்லை. எவ்வாறாயினும் இன்று அல்லது நாளை இக்கப்பலுக்கான டொலரை செலுத்தி பெற்றோலைப் பெற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
மண்ணெண்ணை கையிருப்பு தொடர்பில் பிரச்சினைகள் இல்லை. அதனை தொடர்ந்து விநியோகிக்க முடியும். மீனவர்கள், குறைந்த வருமானத்தைப் பெறுபவர்கள், பெருந்தோட்டங்களில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே மண்ணெண்ணை விநியோகிக்கப்படுகிறது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
6 hours ago
6 hours ago