2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது

R.Tharaniya   / 2025 ஜூன் 12 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு இன்று (12) அளித்துள்ள செவ்வியொன்றின்பேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், 
 
உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றும், அத்தகைய விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பேக்கரி உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக்கொள்கிறார் என்றும் ஜெயவர்தன தெரிவித்தார்.
 
பேக்கரி உற்பத்தியாளர்கள் இதுபோன்ற நேரங்களில் பொதுமக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக மற்ற பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதாகவும், ரொட்டியின் விலை அதிகரித்தால், விலை அதிகரிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால் ரொட்டியின் விலை தற்போதைய விலையிலேயே இருக்கும் என்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X