2025 ஜூன் 11, புதன்கிழமை

பேக்கரி, ஹோட்டல்கள் முடங்கும் அபாயம்

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாயால் அதிகரித்துள்ளதாக நாட்டிலுள்ள இரண்டு பிரதான மா விநியோகஸ்தர்கள், நேற்று (18) அறிவித்துள்ளனர்.

கோதுமை மாவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பேக்கரி உரிமையாளர்கள் தொழிலில் ஈடுபட முடியாமல் தவித்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் அனைத்து பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் சகல உற்பத்திகளையும் நிறுத்தும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி உற்பத்திகளுக்கான அனைத்து மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் பெருமளவு உற்பத்தியை முற்றாக நிறுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

4000 ரூபாய்க்கு குறைவாக இருந்த மா மூடை 12,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் 37.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 20,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கையின் கோதுமை மாவுக்கான தேவையில் 30 சதவீதத்தை வழங்கும் நிறுவனம் ஒரு கிலோ கிராம் மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது என்றும் பல நிறுவனங்களுக்கு மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10