2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு அதிகரிப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூறாவளி, டிட்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று இருதயநோய் நிபுணர் டாக்டர் கோதபயா ரணசிங்க கூறினார். உலகளாவிய ஆராய்ச்சியில்,  இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

திடீர் இழப்பு, அதிர்ச்சி மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவை கடுமையான உளவியல் அழுத்தத்தை உருவாக்குகின்றன, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன, இது மாரடைப்பைத் தூண்டும்

 

பேரிடரால் பாதிக்கப்பட்ட பல மக்கள் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு மற்றும் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் உள்ளிட்ட வழக்கமான மருந்துகளை எடுத்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள், இது அவர்களின் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

 

பொதுமக்களை மன வலிமையைப் பராமரிக்கவும், போதுமான தூக்கத்தைப் பெறவும், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டுமென டாக்டர் ரணசிங்க வலியுறுத்தினார். மார்பு அசௌகரியம் அல்லது இதயம் தொடர்பான அறிகுறிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அவர் அறிவுறுத்தினார்.

 

பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு ஏன் அதிகரிக்கிறது

• கடுமையான மன அழுத்தம் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பை அதிகரிக்கிறது, மேலும் பிளேக் சிதைவை ஏற்படுத்தும்

• மோசமான தூக்கம் மற்றும் சோர்வு இதய செயல்பாட்டை சீர்குலைக்கிறது

• அத்தியாவசிய மருந்துகளைத் தவறவிடுவது ஆபத்தானது

• ஒழுங்கற்ற உணவு சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் இரத்த அழுத்தத்தை பாதிக்கிறது

• புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் இதய அழுத்தத்தை மோசமாக்குகிறது

அதிக ஆபத்தில் உள்ளவர்கள்: இதய நோயாளிகள், முதியவர்கள், உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் உணர்ச்சி அல்லது உடல் அழுத்தத்தில் உள்ளவர்கள்.

பொதுமக்களுக்கு சீக்கிரம் உதவி பெறவும், கிடைக்கக்கூடிய சேவைகளைப் பயன்படுத்தவும் அவர் நினைவூட்டினார்:

சுவ செரிய ஆம்புலன்ஸ் - 1990

இலங்கை STEMI மன்ற ஹாட்லைன் - 076 317 7312


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X