Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
முழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளதாக தாம் நினைக்கவில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருவோரை பெரும்பாலும் தடுத்துள்ள நிலையில், அனைவரும் நாட்டுக்கள் வருவதைத் தடுக்கும் தீர்மானத்தை விரைவில் எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மார்ச் 10 ஆம் திகதியிலிருந்து இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களையும் அவர்கள் இருக்கும் இடங்களைத் தேடிச்செல்லும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் வீட்டினுள் இருப்பதால் இதனைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நோய்த்தொற்று தொடர்பில் எவ்வித பொறுப்பும் இல்லாமல் செயற்படுபவர்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்..
தொற்றுக்குள்ளானவர்களை ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி கண்காணித்தால் இலகுவில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago