Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எமக்குச் சில வாக்குறுதிகள் எழுத்துமூலமாக வழங்கப்பட்டன.
கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தனியார் காணிகளையும் வழங்க வேண்டுமென்பது அதில் ஒன்றாகுமெனத் தெரிவித்துள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஆனால், 10 சதவீதமான தனியார் காணிகள் மீளக் கையளிக்கப்படாமல் உள்ளன.
எனவே, பொறுப்புக் கூற வேண்டிய தன்மை தொடர்பில் இங்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்தப் பொறுப்புக்கூறும் விடயத்தில் எவ்வித முன்னேற்றமுமில்லை என்றார்.
உள்நாட்டுப் பொறிமுறையைப் பயன்படுத்தி அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய அவர், கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கமைய, யுத்தத்தின் பின்னர் 3,022 பேர் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
ஆனால், இது குறித்து எவ்வித உள்நாட்டு விசாரணைகளும் கூட இடம்பெறவில்லை எனக்கூறினார்.
நாடாளுமன்றத்தில், நேற்று (4) இடம்பெற்ற பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குக் கொண்டு வரமாட்டோம் எனத் திரும்பத் திரும்ப கூறுகின்றீர்கள். அவ்வாறு கொண்டு வரக்கூடாதென்றால், இந்த உள்நாட்டு யுத்தக் குற்றங்கள் குறித்து நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். எனவே இந்த வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றார்.
நல்லிணக்கத்தைக் கொண்டு வர முயற்சிப்பதன் ஊடாக, பொறுப்புக் கூறல் விடயத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் ஊடாகவே அரசு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமையவே இன்று ஜனாதிபதியின் இந்த 3 முக்கிய அமைச்சுகளும் கொண்டு வரப்பட்டன. 19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, பாதுகாப்பு அமைச்சு மாத்திரமே ஜனாதிபதியிடம் காணப்பட்டதெனத் தெரிவித்த அவர்,தன் பின்னர் சட்டம், ஒழுங்கு என்ற அமைச்சுகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டன என்றார்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்குவதைப் போல், இந்தாண்டுக்கான நிதியொதுக்கீட்டிலும் பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யுத்தகாலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதியொதுக்கீடு செய்வது சாதாரண விடயம். ஆனால் யுத்தம் நிறைவடைந்து 10 வருடத்தின் பின்னர் பாதுகாப்புச் செலவீனங்கள் ஏன் அதிகரிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக முன்னெடுப்பது குறித்து நடவடிக்கை எடுத்தால் அதிக செலவீனங்களுக்குத் தேவை இருக்காது. இதேவேளை, இன்று வடக்கு, கிழக்கில் அதிகமான காணிகள் வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago