2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

’பொறுமைக்குக் கிடைத்த வெற்றியே ஜனாதிபதி வேட்பாளர் எனும் தகுதி’

Editorial   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்களின் பிரச்சினைகள், அபிவிருத்திகளை நேரடியாக ஆராயந்து தீர்க்க, ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்படும் என, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவு தெரிவிக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முதலாவது பிரசாரக் கூட்டம், ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில், இன்று (06) நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

“கடந்த காலங்களில், தேசிய நீரோட்டத்துடன், மலையகத்தைக் கலக்கவிடாமல் வைத்தத் தலைவர்களைத் தகர்த்து எறிந்துவிட்டு, தற்போது மலையக மக்களும் தற்போது தேசிய நீரோட்டத்துக்குள் வருவதற்கு, த.மு.கூவே காரணம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை,  “கறைபடாத கரங்கள், துடிப்பான தலைவன், தன் தந்தை வழியில் பயணிக்கும் தூர நோக்குகொண்ட மனிதன்” என்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதசவை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

“சஜித்தின் பொறுமைக்குக் கிடைத்த வெற்றியே, ஜனாதிபதி வேட்பாளர் எனும் தகுதி ” என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .