Lenin Raj / 2026 மார்ச் 26 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சரவணன்
விபத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கறைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டவரை நீதிமன்றத்திற்குச் செல்லவிடாது தடுத்து, அதனைச் சமரசமாக முடித்து வைப்பதாகக் கூறி, விபத்தை ஏற்படுத்தியவரிடம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணம் கோரியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய நபர், 4,000 ரூபாவினை லஞ்சமாக வழங்க முயன்றபோது, அங்கு சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த பொலிஸ் உத்தியோகத்தரை கையும் மெய்யுமாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago