2025 ஜூன் 25, புதன்கிழமை

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட கோடீஸ்வர வர்த்தகர் கைது

Editorial   / 2019 மே 30 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருவாத்தோட்டம் சினமன்ட் கிரான்ட்  சொகுசு வீடமைப்புத் தொகுதியில் பாரியளவில் போதை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகரின் வீட்டிலிருந்து வெவ்வேறு வகைகளிலான 410 போதை மாத்திரைகளும் 3 மில்லிகிராம் ஹெரோய்ன், குஷ் போதைப்பொருள் 11 கிராம், நவீன தொழிநுட்பத்துடனான தராசு, போதைப் பொருள்களை பொதி செய்வதற்கான கடதாசிகள் 2500 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

10 மாடிகளைக் கொண்ட குறித்த வீடமைப்புத் தொகுதியில் 3 மாடியிலிருந்து இந்தப் போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கட்டடத்தில் முதலாவது மாடியில் குடியிருக்கும் இந்த வர்த்தகர், மாதாந்தம் 1 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாடகை அ​டிப்படையில் மற்றொருவரின் பெயரில், மூன்றாவது மாடியிலுள்ள வீட்டைப் பெற்றுள்ளாரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசங்களில் வாகன உதிரிப் பாகங்கள்  விற்பனை செய்யும் 3 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சந்தேகநபரை 7 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .