2025 ஜூன் 25, புதன்கிழமை

போதைப்பொருளுடன் ஆவா உறுப்பினர் கைது

Editorial   / 2019 ஜூன் 01 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா 

ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணத்துடன், ஆவா குழு உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வுல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சக்தி என்ற இளைஞரே நேற்று (31) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சக்தி என்ற நபரின் வீட்டை சோதனையிட்ட போதே, 4 கிராம் கஞ்சா மற்றும் 3 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட 7 இலட்சம் ரூபாய், காசு மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த இளைஞர் சக்தி என்ற பெயருடன் வாள் வெட்டுக் குழுவை நடத்தியதாகவும், பல வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .