2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’போராட்டங்களூடாக கொரோனா பரப்பச் சதி?’

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

போராட்டங்களூடாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவலைத் திட்டமிட்டுப் பரப்புவதற்கான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், இது தொடர்பில் தகவல் கிடைத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், பொலிஸார் தங்களது சீருடைகளை மாற்றிக்கொள்வதற்குகூட நேரமில்லாது தங்களதுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாட்டில் காணப்படுவதால், போராட்டங்களை மேற்கொள்வோர் குறைந்தது 6 மணித்தியாலங்களுக்கு முன்பாகப் பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

அத்தியாவசியக் காரணங்கள் தவிர்ந்த ஏனைய பேரணிகள், போராட்டங்களுக்கு அனுமதியில்லை. நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டம், நாட்டிலுள்ள பிரச்சினைகள் தொடர்பான போராட்டம் அல்ல எனவும் கூறினார்.

இதுபோன்ற நேரங்களில் கொரோனா வைரஸ் பரவலைத் திட்டமிட்டுப் பரப்புவதற்கான சதிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் இது தொடர்பான தகவல்கள் கிடைத்தால் விசாரணைகளை முன்னெடுக்கப்படுமெனவும் கூறினார்.

நேற்று முன்தினம் நடைபெற்றப் போராட்டத்தால் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர் என்று இதன்போது தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, இப்போராட்டம் தொடர்பில் ஊடகங்களில் வெளிவராத பல வீடீயோக்கள் பொலிஸாரிடம் இருப்பதாகவும் கூறினார்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 53 சந்தேகநபர்களையும் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X