2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

போலி செய்திகளை பரப்புவோருக்கு சிறை

Editorial   / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாள்களாக, போலியான செய்திகளைப் பரப்புவதன் மூலம், நாட்டில் பொதுத் தொந்தரவுகளை ஏற்படுத்தும் வகையிலான பல சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளதாக, தேசிய ஊடக மய்யம் தெரிவித்துள்ளது.

எனவே, இணையத்தளம், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களினூடாக, போலியான தகவல்களைப் பரப்​புவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாக, அந்த மய்யம் தெரிவித்துள்ளது.

இந்தப் போலியான செய்திகள், பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதாகவும் பொதுத் தொந்தரவுகளையும் ஏற்படுத்துவதாகவும் பாதுகாப்புத் தரப்பினரை, தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

அதனால், பொதுமக்கள் அனைவரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுதை, நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று, தேசிய ஊடக ​மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு, இவ்வாறு ​போலியான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக, அவரச ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு குற்றம் செய்தவர்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு 3 - 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .