Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
J.A. George / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் போலி நாணயத்தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
சந்தேகத்துக்கு இடமான நாணயத்தாள் ஒன்று காணப்பட்டால் பாதுகாப்புச் சின்னம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதனைத் தம்வசம் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயத்தாளை கொண்டு வந்தவர், அவரது தோற்றம், வாகனத்தில் வந்தால் வாகனத்தின் விவரம், பணத்தாளின் மதிப்பு மற்றும் வரிசை எண் ஆகியவற்றைப் பதிவு செய்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வு துறையின் போலி நாணயப் பிரிவினரின் 0112422176 மற்றும் 0112326670 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்க வேண்டும்.
போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல் அல்லது அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பது தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
6 hours ago
6 hours ago
8 hours ago