2025 மே 17, சனிக்கிழமை

மகேந்திரன், மஹிந்த, கப்ராலுக்கு எதிரான மனுக்கள் வாபஸ்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறைசேரி பிணை முறிகளை விநியோகத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்று, நேற்று செவ்வாய்க்கிழமை (25) வாபஸ் பெறப்பட்டது.  

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகிய இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றும் நேற்றைய தினம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாணசபை உறுப்பினர் ரேணுக பெரேராவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், மத்திய வங்கியின் ஆளுநர் மகேந்திரனுக்கு எதிராக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .