Niroshini / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு, 2,600 ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த பொதியில், 20 வகையான அத்தியாவசிய பொருள்கள் உள்ளடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
வர்த்தக அமைச்சில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவர் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்ண அவர், இந்தப் பொதியின் பெறுமதி 1,998 ரூபாயாகும் என்றார்.
1998 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த நிவாரணப் பொதியை மக்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறினார்.
நாடளாவிய ரீதியாக அனைத்து சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக குறித்த நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்
6 minute ago
8 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
51 minute ago