2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி

Freelancer   / 2025 ஜூன் 14 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு - கொச்சிக்கடை, கம்மல்தொட்டுபொல கடற்கரையில் இன்று காலை முச்சக்கர வண்டிக்குள் இருந்து எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் வாகன சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை உள்ளூர்வாசிகள் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், அவர்கள் உடனடியாக கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .