2025 ஜூன் 18, புதன்கிழமை

மட்டக்களப்பில் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் கல்லடி பிரதேசத்தில், இன்று (15) இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுமி உள்ளிட்ட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன், சிறிய ரக மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறிய ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் மற்றொருவரும் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவரின் அதிக வேகமே விபத்துக்குக் காரணமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .