2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படும்

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, இன்று (25) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையானது, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத்தின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டு கண்காணிப்பு குழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த அறிக்கையை, சட்ட மா அதிபர் திணைக்களத்திடமும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், அதை, அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம், அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென, அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .