2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மாணவர்​கள் வெளி​யேற தரைவழி எல்​லைகளை திறந்தது ஈரான்

Editorial   / 2025 ஜூன் 17 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் - இஸ்​ரேல் இடையே தாக்​குதல் தீவிரமடைந்துள்ளது. இந்​நிலை​யில், ஈரானில் தற்​போது 4,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பாதிக்​கும் மேற்​பட்​டோர் மாணவர்​கள். ஈரானில் உள்ள பெரும்​பாலான இந்​திய மாணவர்​கள் ஜம்​மு-​காஷ்மீரை சேர்ந்​தவர்​கள்.

இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்று அங்கு வசிக்​கும் இந்​திய மாணவர்​கள் வெளி​யேற தரைவழி எல்​லைகளை ஈரான் அரசு திறந்​துள்​ளது.

இந்​நிலை​யில் ஈரானில் படிக்​கும் மாணவர்​களை பாது​காப்​பாக வெளி​யேற்ற உதவு​மாறு ஈரான் அரசை, இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டதற்கு இணங்க, தங்​களது தரைவழி எல்​லைகளை திறந்​துள்​ள​தாக​வும், அதன் வழி​யாக மாணவர்​கள் பாது​காப்​பாக வெளி​யேறலாம் என்​றும் ஈரான் அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.

ஈரான் அரசு வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “ஈரான் மீதான வான்​வழி மூடப்​பட்​டிருந்​தா​லும், பொது​மக்​கள் பாது​காப்​பாக நாட்டை விட்டு வெளி​யேறும் வகை​யில் அனைத்து தரைவழி எல்​லைகளும் திறந்​திருக்​கும். மாணவர்​கள் பாது​காப்​பாக செல்​லலாம்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .