Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2025 மே 05 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த 2-ம் திகதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை நோக்கி சென்ற மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்ட நிலையில் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சமரசமாகி சென்று விட்டனர்.
இந்த நிலையில் மே 3-ம் திகதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம் தன்னை உளுந்தூர்பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.
இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து, அது விபத்து என்றும் தெரிவித்து, அது தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.
இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஓட்டுநர் முபாரக் அலி மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாகவும் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்ததாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் உளுந்தூர்பேட்டை பொலிஸார் விசாரணை செய்து மதுரை ஆதீனம் சென்ற காரின் ஓட்டுனர் மீது இன்று (மே 5) 2 பிரிவுகளில் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago