2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘மதரஸாக்களை தடைசெய்வது தொடர்பான சட்டமூலம் உருவாக்கப்பட்டு வருகின்றது’

Editorial   / 2019 மே 02 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள மதரஸாக்களை தடை செய்வது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் விவகார அமைச்சர், தற்போது, மதரஸா கல்வி நிறுவனங்களைத் தடை செய்வது தொடர்பான சட்ட திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், அதேப்போல் மதரஸா என்ற பெயர்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வரும் வீசா அற்ற வெளிநாட்டு ஆசிரியர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .