2025 ஜூன் 25, புதன்கிழமை

‘மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை’

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு,நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை  மூடுவதற்கு, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, கலால் திணைக்கள ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கடிதம் ஒன்றை கலால் திணைக்கள ஆணையாளருக்கு மத்திய மாகாண ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாகவும் நாட்டின் தற்போதைய நிலைமையில், மதுபானம் அருந்துபவர்களின் நடவடிக்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இத் தினங்களில் மதுபானசாலைகளை மூடுவதன் மூலம் சில பாரதூரமான நடவடிக்கைகளை கட்டுபடுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .