2025 ஜூன் 28, சனிக்கிழமை

மதூஸுக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாக்கந்துர மதூஸ் உள்ளிட்டவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனம் தொடர்பில், தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்துக்கான முழுமையாக நிதியை செலுத்துபவர் மாக்கந்துர மதூஷ் என்பதுடன் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கஞ்சிபானி​ இம்ரான் என்ற போதிலும், மொஹமட் ரிஸ்வான் என்ற நபரே இந்நிறுவனத்தை நடத்திச்  சென்றுள்ளார்.

எனினும் பாதாளக்குழுவொன்றின் தலைவராகக் கருதுப்படும் கோத்த அசங்க என்பவரின் உத்தரவுக்கமைய ரிஸ்வான் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட  நிலையில், கொஸ் மல்லியாலேயே ரிஸ்வான் கொல்லப்பட்டுள்ளாரென்று மதூஸால் கண்டறியப்பட்டுள்ளது.

இதே​வேளை ரிஸ்வான் கொல்லப்பட்டதைப் போன்றே, ​அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் வைத்து கொஸ் மல்லியும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதை டுபாயிலிருந்தவாறே இணையம் ஊடாக மதூஸ் அவதானித்துள்ளார்.

குறித்த சகல விடயங்களும் கஞ்சிபானி இம்ரானிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .