Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கியின் கையிருப்பு வீதத்தை குறைப்பதாக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் பொருத்தமற்றதென தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர், வருண ராஜபக்ஷ கையிருப்பு தொகையை அதிமாக பேணியதாலேயே நல்லாட்சியின் காலத்தில் பொருள்களின் விலை குறைவாக பேணப்பட்டதெனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
மத்திய வங்கியில் இடம்பெறும் செயற்பாடுகள் என்னவென நாட்டு மக்கள் அறியாவிட்டாலும், மத்திய வங்கியின் செயற்பாடுகளால் வரும் பாதிப்புகளை சகலரும் எதிர்கொள்ள நேரிடுமெனவும் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் மத்திய வங்கியின் கையிருப்பு 6 வீதமாக காணப்பட்டதெனவும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அந்த தொகையானது 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.
அநாவசியமான பணவீக்கத்தை தவிர்த்துகொள்ளும் நோக்கிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதென தெரிவித்த அவர், அதனாலேயே கடந்த அரசாங்கத்தால், அத்தியாவசிய பொருள்களினதும், சமயல் எறிவாயு , எரிபொருள் விலையையும் குறைந்த அளவில் பேண முடிந்தது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
43 minute ago