Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 26ஆம் திகதி மத்தேகொட மக்கள் வங்கி கிளைக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி, வங்கியிலிருந்து பணம், தங்கநகைகள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்ற மூவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த, கல்கிஸ்ஸை பொலிஸ் விசேட பிரிவால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 40 மற்றும் 41 வயதுடையவர்களெனவும் இவர்களுள் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு வங்கியில் கொள்ளையிடப்பட்ட 9.3 மில்லியன் பணமும், 49.3 மில்லியன் பெறுமதியான தங்கநகைகளும் சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago