2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

மன்னா ரமேஷ் இலங்கை அழைத்து வரப்பட்டார்

Simrith   / 2024 மே 07 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலின் தலைவர் எனப்படும் மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரியஜனக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (07) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

தேடப்படும் பாதாள உலக பிரமுகருடன் வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழு இன்று (07) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

டுபாயில் 'மன்னா ரமேஷ்' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான ரமேஷ் பிரியஜனக கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு மார்ச் 06ஆம் திகதி தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேடப்பட்டு வந்த குற்றவாளியை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு துபாய் பொலிஸாரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.

'மன்னா ரமேஷ்' துபாயில் தங்கியிருந்து பல குற்றங்களைத் திட்டமிட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலின் தலைவனாக சந்தேகிக்கப்படும் அதே வேளையில், அவிசாவளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கொலைகள் உட்பட பற்பல குற்றங்களுக்காக சிறிலங்கா பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

நாடு திரும்பிய குற்றப் பிரமுகர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X