2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மின்னுயர்த்தியில் சிக்கி இளைஞன் மரணம்

Editorial   / 2025 ஜூன் 15 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொரட்டுவை நடு (மெத)  வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர், ஹோட்டலில் உள் வேலைக்குப் பயன்படுத்தப்படும் மின்னுயர்த்தியில் (லிஃப்டில்) சிக்கி உயிரிழந்துள்ளார் என மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் ரவிந்து பீரிஸ் (19) என்ற இளைஞர் ஆவார், அவர் பாணந்துறை, அருக்கொடவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த நாளில் நான்கு மாடி ஹோட்டலின் மேல் தளத்திற்கு கோப்பைகள் மற்றும் தட்டுகளை எடுத்துச் சென்றபோது லிஃப்ட் அவர் மீது சரிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X