2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மனைவி கொலை: கணவருக்கு மறியல்

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம் றொசாந்த் 

குடும்ப தகராறு காணரமாக,  மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பஸ்தரை, ஜூலை 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு,  யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார். 

யாழ்ப்பாணம் – குருநகர், சென்றொக் வாசிகசாலைக்கு அருகாமையில் வசிக்கும்  3 பிள்ளைகளின் தாயரான ஜே.யு. பொலினியா (வயது 47) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.. 

இந்தச் சம்பவம், வியாழக்கிழமை இடம்பெற்றது.

அவரது உடலில் கழுத்து உள்பட 12 இடங்களில் கத்திக் குத்து இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

இச்சம்பவத்தை அடுத்து தலைமறைவாகியிருந்த குடும்பஸ்தர், வியாழக்கிழமை மாலை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையில் சரணடைந்திருந்தார்.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில், நேற்று முற்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .