2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மயில் மாளிகை நீச்சல் தடாகத்தில் தங்கம் இல்லையாம்: மஹிந்த

Thipaan   / 2016 ஜனவரி 19 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் தங்கவிருந்ததாகக் கூறப்படும் மயில் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் தங்கம் இல்லை முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், டொலர் திரட்டப்பட்ட விதம் தொடர்பில் தேடி பார்க்குமாறும் அவர் கோரிக்கைவிடுத்தார்.

பண்டாரகம குருச சந்தியில் உள்ள சுதர்ஷணாராமய விஹாரையில் மதவழிபாடுகளில் ஈடுபட்டு திரும்பும் போது, ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்தனர்.

இதன்போது கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்கள், புதிதாக உருவாக்கப்படும் கட்சிக்கு நீங்களா அல்லது உங்களுடைய சகோதரனா தலைவர்? என்று வினவினர். இந்தக் கதைகளையெல்லாம் நீங்கள் (ஊடகவியலாளர்கள்) தான் உருவாக்குகின்றீர்கள் என்று பதிலளித்தார்.

குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், வர்த்தகர் ஏ.எஸ். பி.லியனகே, உங்களுக்கு பரிசளிக்க விருந்ததாக கூறப்படும் நாவலையில் உள்ள மயில் மாளிகையின் நீச்சல் தடாகம், மணலால் மூடப்பட்டு அதற்குள் தங்கம் போடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதே? என்று கேட்டனர்.

அவை மறைக்கப்படவில்லை. டொலர் மில்லியன் எவ்வாறு வந்தது என்று தேடிபார்க்கவும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி பதிலளித்தார்.

இந்த பூஜைக்கான ஏற்பாடுகள் மேல் மாகாண சபை உறுப்பினர் லலித் எல்லாவல ஏற்பாடு செய்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கவிருந்த மயில் மாளிகையின் நீச்சல் தடாகம் மண் இட்டு மூடப்பட்ட போது, அதற்குள் தங்கங்களும் பணமும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து விசாரணைகளை நடத்துமாறு, அம்மாளிகையின் உரிமையாளரான ஏ.எஸ். பி.லியனகே, பொலிஸ்மா அதிபருக்கு அண்மையில் கடிதமொன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, தனது நற்பெயரைக் காக்குமாறு மயில் மாளிகையை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பரிசளிக்கவிருந்த அம்மாளிகையின் உரிமையாளர், தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X