2025 ஜூன் 18, புதன்கிழமை

மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜூன் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தர்மடத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் கெனக்அசான் (வயது 20) என்ற இளைஞர் ஆவார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (17) நண்பகல் மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .