Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 29 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்குத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ள நிலையில், இத்தீர்மானத்துக்கு, நோர்வே அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
நோர்வே தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் 43 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளமையால் நோர்வே கவலையடைவதாகவும் டிசெம்பர் 2018இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மரண தண்டனையை நிறுத்திவைக்கும் செயற்பாட்டுக்கு ஆதரவளித்த 120 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதென்பது இலங்கையின் சர்வதேச மதிப்பையும், மனித உரிமைகள் செயற்பாடுகளையும் பாதிக்கும் செயலாகும் என்றும் கொள்கை ரீதியில் அனைத்து வகையான மரண தண்டனையையும் நோர்வே கடுமையாக எதிர்க்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், அனைத்து குடிமக்களினதும் மனித உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அனைத்து நாடுகளினதும் கடமை என நோர்வே நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இலங்கையை மீண்டும் மரண தண்டனையை அறிமுகம் செய்வதை கைவிடுமாறு நோர்வே கோரியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .