Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் வீரண்ணா (வயது 44). இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. மேலும், 12 மற்றும் 10 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எச்.டி.கோட்டை தாலுகாவை சேர்ந்த பலராம் என்ற வாலிபருடன் சிவம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 பேரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதுபற்றி வீரண்ணாவுக்கு தெரியவந்ததால், தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர், இதுகுறித்து வீரண்ணா கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சிவம்மாவையும், பலராமையும் கண்டித்து அனுப்பியுள்ளனர். இருப்பினும், பலராமும், சிவம்மாவும் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 9-ந் திகதி இரவு சிவம்மாவுக்கு, பலராமிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதைப்பார்த்த, வீரண்ணா, சிவம்மாவிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சிவம்மா, வீரண்ணாவை அவரது மர்ம உறுப்பில் பலமாக தாக்கியுள்ளார். இதனால், வீரண்ணா அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
பின்னர், சிவம்மா தனது சேலையில் வீரண்ணாவை தொங்க விட்டுள்ளார். பின்னர், ஊர் மக்களிடம் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடி உள்ளார். பின்னர், கிராம மக்கள் இதுபற்றி நஞ்சன்கூடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சிவண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவம்மாவுக்கும், பலராமுக்கும் இருந்த கள்ளக்காதல் விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதனால், சிவம்மாவை போலீசார் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவம்மா, வீரண்ணாவை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், இந்த கொலை பற்றி தகவல் அறிந்த கள்ளக்காதலன் பலராம் தலைமறைவானார். இதையடுத்து போலீசார் பலராமுக்கும், இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என விசாரிக்க அவரை வலைவீசி தேடி வருகின்றனர். சிவம்மாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago