2024 மே 01, புதன்கிழமை

மர்ம மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை

Simrith   / 2024 ஏப்ரல் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இரண்டு வயோதிபப் பெண்கள் புதன்கிழமை (ஏப்ரல் 17) சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண்களும் சில நாட்களாக காணாமல் போனதாகவும் அத்துடன் அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் அயலவர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜன்னல் வழியாக வீட்டை சோதனை செய்த பொலிஸார், இரண்டு பெண்களும் அவர்களது படுக்கையறையின் தரையில் இறந்து கிடந்ததைக் கண்டனர், அதே நேரத்தில் வீடு பூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த இரண்டு பெண்களும் 65 மற்றும் 79 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் குறித்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .